வடகிழக்கு பருவம்ழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.இதில் பலர் வீடுகள்,பொருட்களை இழந்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக ஆரசு நிவாரணத் தொகை அறிவித்தது.இதனையடுத்து சென்னை மாவட்ட வருவாய் அலுவலர்களும், ஊழியர்களும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அதற்கான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இந்த பணிகள் ஒருங்கிணைப்பாளராக தண்டையார்பேட்டை தாசில்தார் சத்யபிரசாத் கவனித்துவருகிறார்.