சுவாதியை இன்னும் எத்தனை நாட்கள் பாதுகாத்து வைக்க முடியும்: தந்தையின் புலம்பலுக்கு காரணம் என்ன?

வெள்ளி, 29 ஜூலை 2016 (13:54 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியில் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் பல்வேறு தரப்பில் இருந்து தினமும் வருகின்றன.


 
 
இந்த கொலைக்கு ராம்குமார் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், ராம்குமார் மட்டுமே இந்த கொலையை செய்திருக்கமாட்டான் என பலத்த சந்தேகங்கள் கிளம்புகின்றன.
 
சுவாதி படுகொலை செய்யப்பட்டு ரயில் நிலையத்தில் கிடந்த போது அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் சுவாதியை பாதுகாத்து வைக்க முடியும் என புலம்பியதாக சொல்லப்படுகிறது. அப்படியானால் சுவாதிக்கு ஏதோ அச்சுறுத்தல் இருந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
 
அதன் காரணமாகவே சுவாதியை தினமும் பைக்கில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவந்து இறக்கி விட்டிருக்கிறார் அவரது தந்தை. சுவாதி கொலை வழக்கில் அவரது பெற்றோரின் அதீத மௌனம் இந்த கொலையில் சந்தேகத்தை வர வைக்கிறது எனவும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்