எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தது. சட்டசபை விதிகளுக்கு எதிரானது. மேலும் இரண்டு முறை அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை மூன்றாவது முறையாக கூடியது, இவற்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் கொண்டு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை இரண்டு முறை முன் மொழிந்ததும் சர்ச்சையாகியுள்ளது.