விழாவில் பேசிய விஷால் கூறியதாவது:-
விவசாயிகளுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு பேச வேண்டுமானால் நானும் விவசாயியாக மாற வேண்டும். எனக்கு விதை விதைப்பது மிகவும் பிடித்த பணி, அதுதான் எனது நீண்ட நாள் விருப்பம்.
கடன் உள்ளிட எந்த பிரச்சனை வந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு செல்லக் கூடாது, அது நிரந்தர தீர்வும் அல்ல. இதுவே எனது வேண்டுகோள், என்றார்.