தமிழகம் முழுவதும் இவரது முதல்வர் பதவிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரது மத்தியிலும் சசிகலாவுக்கு எதிர்ப்பே உள்ளது. இந்நிலையில் சசிகலா மீதான் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில் முதல்வராக இருந்த பன்னீர்செல்வமும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் தமிழக அரசியல் நிலவரம் சற்று பதற்றமாகவே உள்ளது. இதனால் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடமும், குடியரசு தலைவரிடமும் முறையிட டெல்லி விரைகிறார்.