தென்காசி அடுத்த இலஞ்சி பாரத் மான்டிசோரி பள்ளியில் 241 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில், அவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி எம்.சுப்ரிதா 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
மாணவி சுப்பிதா, தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.