ஸ்ரீநிவாசனை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி

வெள்ளி, 27 நவம்பர் 2015 (21:21 IST)
சென்னையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசனை திடீரென சந்தித்தார்.


 
 
சென்னை அடையாறில் உள்ள ஸ்ரீநிவாசனின் இல்லத்தில் சுப்பிரமணியன் சுவாமி இன்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள 2 ஆண்டுகள் தடை குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னைக்கு அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி , சுப்பிரமணியன் சுவாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்