இது குறித்து, நெல்லையில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
நெல்லையில், புதிய ராக்கெட் ஏவுதளம் அமைய வாய்ப்பு அதிகம் உள்ளது. இது குறித்து மத்திய அரசு எனக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இங்கு ராக்கெட் தளம் அமைந்தால், அது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மாற்றாக அமையும் என நம்புகிறேன்.