குளு குளு மேடை ஜெயலலிதா - கோடை வெயிலில் பொது மக்கள் - சுப.வீ. தாக்குதல்

புதன், 4 மே 2016 (23:14 IST)
முதல்வர் ஜெயலலிதா குளுகுளு மேடையிலும் கொளுத்தும் வெயிலில் பொது மக்களும் உள்ளதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். 
 

 
தமிழக சட்டப் பேரவை தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றார்.
 
இந்த நிலையில், ஜெயலிலதா தேர்தல் பிரசாரம் செய்யும் போது, முதல்வர் ஜெயலலிதா குளுகுளு மேடையிலும் கொளுத்தும் வெயிலில் பொது மக்களும் உள்ளனர்.
 
ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்களில் வெயிலின் கொடுமையால் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதற்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும் என கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்