இந்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் புதுச்சேரி மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால், அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. பின்னர், சிபிஐ நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூரை அடுத்த காந்தி குப்பத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் முத்துகுமார் (வயது 27), அவரது நண்பர் என்ஜினீயரிங் மாணவர் வெங்கடாஜலபதி (25) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.