நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது

சனி, 7 நவம்பர் 2015 (00:33 IST)
நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
 

 
தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும், காவிரி நதிநீர் பிரச்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறியதற்கு, நதி நீர் பிரச்னைக்காக போராடி வரும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று ஆர்பாட்டம் நத்தினர். மேலும், நடிகர் விஷாலின் உருவ பொம்பையை எரித்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்