கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் நேற்று முன்தினம் இரவு உப்பிலிபாளையம் சாலையில் மதுபோதையில் சுயநினைவு இழந்து தல்லாடிய படி சென்றுள்ளார். அப்பொழுது, அங்கு இருந்த தெருநாய்கள் இவருடைய சத்தத்தை கேட்டு இவரை வெரட்டிக் கொண்டு சென்றுள்ளது.
பின்னர், கை, கால்களில் சதைகள் குதறப்பட்ட நிலையில் மதுபோதையில் இருந்த புகழேந்தி சிங்காநல்லூர் சாலையில் இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து சாலையோரம் நடந்து சென்ற ஒருவர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.