இதையடுத்து கூடலூரில் அவர் பொது மக்களிடையே பேசிய போது “கூடலூர் பகுதியில் உள்ள விரிவு 17ல் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கு கடந்த திமுக ஆட்சி காலத்திலேயே முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரிவு 17ல் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும்.