நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியான திமுக நடந்து கொண்ட விதம் அனைத்து தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு கண்டனத்துக்கு உள்ளானது. சபாநாயகரின் சட்டை கிழிக்கப்பட்டு, அவரது மைக், நாற்காலி போன்றவை சேதப்படுத்தப்பட்டது.
வெறும் 29 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஜெயலலிதா என்கிற மதம் கொண்ட யானையை சினம் கொண்ட சிங்கமாக ஒண்டிக்கு ஒண்டி எதிர்த்தார் விஜயகாந்த். சட்டை, பனியன் கிழியாமல் வெளியே வந்தார். ஆனால் 89 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு சின்னப் பசங்க போல சட்டை பனியனை கிழித்துக் கொண்டு வெளியே வருகிறார் அவர் ஒரு காமெடி அரசியல்வாதி என்றார் பிரேமலதா விஜயகாந்த்.