சென்னை கூடுவாஞ்சேரி அருகே தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, ஆர்.ஆர்.பி. என்ற பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பத்மநாபன் அபகரித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளேன் என்று நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி கூறினார்.