புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினத்தை சார்ந்த 16 மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மீனவர் சங்க தலைவர் எஸ்.எமிரெட் மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன் பிடித்தனர் என தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் யாழ் மாவட்டம் கான்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டன.