இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து 105 பயணிகளுடன் விமானம் ஒன்று நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது விமானத்தின் சக்கரம் பழுது ஏற்பட்டிருப்பதை கண்டறிந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்தார்.