சென்னையில் பாகிஸ்தான் உளவாளிகள் ஜாகீர்உசேன் உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியது. ஜாகீர் உசேன் இலங்கையை சேர்ந்தவர். மேலும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
சென்னையில் கைது செய்யப்பட்ட அந்த உளவாளியின் பெயர் அருண் என்பதாகும். அவரும் இலங்கையை சேர்ந்தவர் தான். அவரை இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்த போவதாக தேசிய புலனாய்வு போலீசார் தெரிவித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரிடம் இருந்து 2 பாஸ்போர்ட்டுகள், லேப்–டாப் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.