டெல்லியிலிருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை வந்த, மீனவர்களை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
போதைப் பொருள் கடத்தியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரையும் இலங்கை அரசு விடுவித்ததை அடுத்து அவர்கள் டெல்லி வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் பி.வளர்மதி, சுந்தர்ராஜ், கே.ஏ. ஜெயபால், மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஆகியோர் வரவேற்றனர்.