இந்நிலையில் மக்கள் நல கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறிய போது, காவிரி பிரச்சனை பொதுப்பிரச்சனை என்பதால் அனைத்துக் கட்சி கூட்டத்தை யார் கூட்டினாலும் பங்கேற்கலாம் என்ற கருத்தை மக்கள் நல கூட்டணியில் முன்வைத்தேன். ஆனால் கூட்டணியில் உள்ள பெரும்பான்மையின் அடிப்படையில் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.