தமிழகத்தில், குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவிட வேண்டும் என சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பல பகுதிகளில் கனமழை, புயல் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், பெருமாள், வீரமுத்து குடும்பத்தினர் 10-க்கும் மேற்பட்டவர்களும், மற்றும் கெடிலம் ஆற்று வெள்ளப்பெருக்கில் மூவர் உள்பட 16-க்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.