பேருந்து பயணத்தைவிட ரயில் பணயத்தையே அதிக அளவு மக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முக்கிய ரயில்கள் அனைத்திலும் கும்பல் குவிந்து வருகிறது. மேலும், காத்திருப்போர் பட்டியல் அதிக பேர் இடம் பிடித்துள்ளனர்.
இதில், குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் ரயில்களும், அங்கிருந்து சென்னை வரும் ரயில்களில் அதிக அளவு மக்கள் பயணம் செய்கின்றனர். இதனால், அந்த ரயில்களில் இடம் கிடைக்காமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து டிசம்பர் 11 ஆம் தேதி மற்றும் 18 ஆம் தேதி அன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.