சென்னையில் வேலை வாய்ப்பு முகாம்

சனி, 17 அக்டோபர் 2015 (05:55 IST)
தமிழக அரசின் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சென்னையில் நடைபெற உள்ளது.
 

 
தமிழக அரசின் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சென்னை தண்டையார் பேட்டையில் இன்று நடைபெற உள்ளது.  தமிழக அரசின் தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறையும், சென்னை மாவட்ட நிர்வாகமும் இணைந்து, இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.
 
இந்த வேலைவாய்ப்பு முகாமில், 302 பெரு நிறுவனங்கள் காட்சி அரங்குகளை அமைத்துள்ளன. இதில், 23 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 
இந்த முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெற, தமிழக அரசு வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் இதுவரை சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த முகாம் காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதில், தமிழக அமைச்சர்கள் பழனியப்பன், மோகன், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்