சென்னையில் பெய்த கன மழை காரணமாக பலரின் முக்கிய ஆவணங்களான நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டா, கல்வி சான்றிதழ், கேஸ் இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகல் சான்றிதழ்கள் ஆகியவை சேதமடைந்தது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக, பலர் தங்களின் ஆவணங்களை பறி கொடுத்தனர்.
எனவே அவர்களுக்கு அந்த ஆவணங்களை கட்டணமின்றி வழங்கும் வகையில், தமிழக அரசு சென்னையில் உள்ள 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலங்களில் நேற்று முதல்(14.12.2015) முதல் 28.12.2015 வரை சிறப்பு முகாம்கள் நடத்துகிறது.