நான் விவாகரத்து செய்யப்போவது உண்மைதான்: மனம் திறந்த ரஜினி மகள்!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (10:38 IST)
கடந்த இரண்டு தினங்களாக ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அவரது கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.


 
 
இது தொடர்பாக அவர் தரப்பில் எந்தவித அறிக்கையோ, மறுப்போ வரவில்லை. இந்நிலையில் சௌந்தர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் தான் விவாகரத்து செய்யப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

 
தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து வரும் செய்திகள் உண்மையே. கடந்த ஒரு வடத்திற்கு மேலாக நாங்கள் தனியாகத் தான் வாழ்ந்து வருகிறோம். விவாகரத்து தொடர்பான பேச்சுக்கள் நடந்து வருகின்றன. என்னுடைய குடும்பத்தின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளியுங்கள் என சௌந்தர்யா தனது டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்