சொத்துத் தகராறு – தாயை வெட்டிக் கொன்ற மகன் !

புதன், 19 டிசம்பர் 2018 (09:36 IST)
தாம்பரத்தில் பேருந்தில் வைத்து தாய் மற்றும் சகோதரி இருவரையும் வெட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் . அவரது தாயார் முத்தம்மாள். தேவராஜுக்கு 3 சகோதரிகள் உள்ளனர். முத்தமமாளுக்கு கூடுவாஞ்சேரியில் சொந்த நிலம் இருந்திருக்கிறது. அதை விற்று சொத்தை தனது மகனுக்கும் மகள்களுக்கும் சரிசமமாக்ப் பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார் முத்தம்மாள்.

சொத்து சரிசமமாக பிரிவதில் தேவராஜுக்கு உடன்பாடு இல்லை. சொத்து முழுவதும் தனக்கேத் தரவேண்டும் எனத் தாய் முத்தம்மாளிடம் கூறியிருக்கிறார். இதனை முத்தம்மாள் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் தாயுக்கும் மகனுக்கும் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது. விடாப்பிடியாக முத்தம்மாள் சொத்தை சரிசமமாகதான் பிரித்துக் கொடுப்பேன் எனக் கூறியிருக்கிறார்.

இதனால் கோபமடைந்த தேவராஜ் தனது தாயைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். இதனால் தனது சகோதரி விஜயம்மாளுடன் கோவூருக்கு சென்று கொண்டிருந்த தாயாரை தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலில் முத்தம்மாளுடன் சேர்ந்து விஜயம்மாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இருவரையும் வெட்டிய தேவராஜன் அங்கிருந்து நேராக தாம்பரம் காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் குழு முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவித்தனர். படுகாயம் அடைந்த விஜயம்மாள் குரோம்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். பொது இடத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்