மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் சுவாமி பேசுவதை போல் பேசினால் பாஜகவினர் அமைதியாக இருப்பார்களா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. சுவாமியின் தமிழர் விரோதபோக்கை எதிர்த்து கருத்து சொல்லவோ, அவரது வரம்பு மீறிய பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவோ தமிழக பாஜகவுக்கு தைரியம் இல்லை.
இந்நிலையில் தற்போது அவர் குறிப்பிடும் தமிழ் பொறுக்கிகள் மீது ஐஎஸ் தீவிரவாதி என்ற முத்திரையை குத்த தயாரகிவிட்டார். இன்று அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தான், ராஜஸ்தான் எல்லை பகுதி வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அமைப்பின் ஏஜெண்ட் 6 பேர் சென்னைக்குள் நுழைந்துள்ளனர். தமிழக பொறுக்கிகள் தான் அவர்களது இலக்கு என கூறியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து தமிழக இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் தமிழக இளைஞர்களை இவர் ஐஎஸ் தீவரவாதிகள் என்று அழைப்பதற்கான முன்னோட்டம் தான் இந்த டுவிட்டர் பதிவு என கூறப்படுகிறது. பாஜக தலைமை உடனடியாக தலையிட்டு சுப்பிரமணியன் சுவாமியை கண்டிக்க வேண்டும் என்பதே பலரதும் கருத்தாக உள்ளது. ஆனால் அது நடக்குமா?.