இது குறித்து கூறியுள்ள சந்திரகுமார், "தேமுதிக என்பது கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. கட்சியில் கேப்டனின் மனைவியான அண்ணியார் தலையீடு வந்ததில் இருந்தே, கேப்டன் கட்டுப்பாட்டில் இருந்து கட்சி சென்றுவிட்டது.
இப்போதும் நான் தேமுதிகவின் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மதிப்பளித்துதான் திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளேன். பெட்டி பெட்டியாக பணம் வாங்கியதும், கொள்ளையடித்ததும், கொள்ளை களவானிகளோடு ரகசிய கூட்டு வைத்திருப்பதும் அவர்களது மனசாட்சிக்கு தெரியும்" என்று கூறியுள்ளார்.