இதனையடுத்து அவர்கள் 3 பேரும் சரண் அடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டியிருக்கும் நிலையில், சசிகலா இரவு கூவத்தூரில் இருந்து புறப்பட்டார்.
போயஸ் கார்டனிற்கு வந்ததும் அங்கே கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசிய சசிகலா, ‘’நான் எங்கேயோ இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்காதீர்கள். எல்லோருடைய மனதிலும் நான் இருப்பேன். உணர்ச்சிவசப்படாமல் அதிமுகவை தொண்டர்களாகிய நீங்கள் வழிநடத்த வேண்டும்.