இந்நிலையில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா செய்தியாளர்ளை சந்தித்தார். அப்பொழுது கூறுகையில், காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்க முடியும். புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் வர அதிக காரணம். எனவே அதை பயன்படுத்துவதை உடனடியாக இளைஞர்கள் நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகர பகுதிகளில் பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்றுநோய் காணப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்க தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊசியை விழுப்புர மாவட்ட மக்களுக்கு முதன் முதலாக போட உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.