மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் ஷகிலா. இவருக்கு கேரளா மட்டுமில்லாமல், தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் படங்களை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலைமோதிய காலமுண்டு. மலையாள சூப்பர் ஸ்டார்களான, மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரின் படங்களை விட ஷகிலாவின் படம் அதிக வசூலை கேரளாவில் வசூலித்தது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் “என்னுடைய வாழ்க்கை மிகவும் கடினமானது. பல துன்பங்களை நான் அனுபவித்துள்ளேன். எதை செய்தாலும் அதில் முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பேன். சமையல் வேலை செய்தாலும், அது மிகுந்த சுவையோடு இருக்க வேண்டும் என நினைப்பேன்.
எனக்கு இளம் வயதில் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என என் பெற்றோர்கள் மிகவும் ஆசைப்பட்டனர். ஆனால் அது நடக்கவில்லை. எனவே, அவர்களின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனது என் மனதில் நிரந்தர வலியாகவே இருக்கிறது. என் வாழ்வில் தற்போது அவர்கள் இல்லை. அதனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல், தனிமையில் நான் வாடுகிறேன்” என ஷகிலா தெரிவித்துள்ளார்.