சென்னை, திருப்பூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

புதன், 7 செப்டம்பர் 2016 (20:02 IST)
ஓணம் பண்டிகை தொடங்கியதை அடுத்து கேரளா மாநிலம் களைகட்டியுள்ளது.


 


மகாபலி மன்னன் தன் நாட்டு மக்கள் மீதுள்ள அன்பால் வருடத்திற்கு ஒருமுறை காண வருவார் என்பது மக்களின் நம்பிக்கை.

இதை கேரளா மக்கள் ஓணம் பண்டிகையாக கடைபிடிக்கின்றனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா ஞாயிறன்று தொடங்கியது.  

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 14ம் தேதிக்கு பதில் அக்டோபர் 8ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்