அனைத்து வாதங்களும் நிறைவு. செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியின் தீர்ப்பு எப்போது?

வெள்ளி, 14 ஜூலை 2023 (15:17 IST)
செந்தில்பாலாஜி வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து 3வது நீதிபதியின் தீர்ப்பு இன்று மாலை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறதுஇ.
 
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
 
செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு தாக்கல் செய்தது 
 
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதி அமர்வுக்கு செந்தில்பாலாஜி வழக்கு மாற்றப்பட்ட நிலையில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில், 3 நாள் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் 3வது நீதிபதியின் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்