காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் மறைவுக்கு செல்வப் பெருந்தகை இரங்கல்

புதன், 25 நவம்பர் 2015 (01:02 IST)
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரவு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான, கு.செல்வப் பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.


 

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரவு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான, கு.செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.எஸ். பொன்னம்மாள் காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர். 
 
காங்கிரஸ் சார்பில், 9 சட்டமன்றத் தேர்தல்களில் நிலக்கோட்டை, சோழவந்தான், பழனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு 7 முறை வெற்றி பெற்றவர். கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து மக்களாலும் ‘அக்கா பொன்னம்மாள்” என்று அன்போடு அழைக்கப்பட்ட அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். 
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்