செம்பரமபாக்கம் ஏரியில் இருந்து இன்று நீர் திரப்பு!

செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:47 IST)
சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து இன்று உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த பருவ மழை ஜனவரி 12 ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் இன்று உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இரண்டு ஏரிகளில் இருந்தும் சுமார் 500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்