சிதம்பரம் அருகே வடக்கு தில்லைநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் மனைவி செல்வராணி (வயது 28). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்–மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் கணவரிடம் இருந்து பிரிந்து செல்வராணி அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், செல்வராணிக்கும், அதே ஊரை சேர்ந்த மற்றொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் செல்வராணி தனது கள்ளக்காதலன் வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதே ஊரை சேர்ந்த ஒருவர் செல்வாரணியும், கள்ளக்காதலனும் நெருக்கமாக இருப்பதை மறைந்திருந்து செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர், ஆபாச படத்தை அந்த நபர் புளூடுத் மூலம் அப்பகுதியில் உள்ள மற்ற இளைஞர்களின் செல்போனுக்கு அனுப்பி இருக்கிறார்.