நாங்கள் அடக்கி வாசிப்பதால் தான் அண்ணாமலையால் பேச முடிகிறது: அமைச்சர் சேகர்பாபு..!

Mahendran

சனி, 30 மார்ச் 2024 (11:30 IST)
நாங்கள் அடக்கி வாசிப்பதால் தான் அண்ணாமலையால் பேச முடிகிறது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி தமிழ்நாடு குறித்து சமீபத்தில் விமர்சனம் செய்த போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறியதற்கு இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் பிரதமர் மோடி அடிக்கடி இங்கு வந்து போக முடிகிறது என்றும் அண்ணாமலையும் வாய்க்கு வந்தபடி பேச முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களை அடக்கி வாசிக்க சொன்னதால்தான் நாங்கள் அமைதியாக இருந்து கொண்டிருக்கின்றோம் என்றும் அதனால் தான் அண்ணாமலையால் தனது வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்

அமைச்சர் சேகர்பாபுவின் இந்த பதிலுக்கு அண்ணாமலை என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்