சிபிசிஐடி காவல்துறை அலுவலகத்தில் சீமான் ஆஜர்

புதன், 29 அக்டோபர் 2014 (18:16 IST)
இந்து கடவுள்களை அவமதித்து பேசியதாக சிபிசிஐடி காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் சீமான் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
 
இந்து கடவுள்களை அவமதித்து பேசியதாக கூறி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. 
 
இதை ஏற்று இன்று எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சீமான் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்