அப்போது அவர் கூறியதாவது:–
தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தலைவன் பிரபாகரன். பெற்ற பிள்ளைகளுக்கு எல்லாம் பதவி கொடுத்து, கடைசி வரை பதவியைத் தேடிய தலைவர்களுக்கு மத்தியில், தான் பெற்றெடுத்த பிள்ளைகளை களத்தில் பலிகொடுத்த தலைவர்தான், பிரபாகரன்.
50 ஆண்டுகால திமுக ஆட்சியில் என்ன மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது? திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் பசி, பஞ்சம், பட்டினி, வறுமை, ஏழ்மை தான் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜகவுக்கு நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.