ஓட்டுனரின் மரணம் - கதறி அழுது அன்பை செலுத்திய சீமான் !

சனி, 8 பிப்ரவரி 2020 (15:01 IST)
அன்புவின் உடலை சுமந்து செல்லும் சீமான்

சீமான் தன்னுடன் நீண்டகாலம் இருந்தவரான ஓட்டுனர் அன்புச்செழியன் மரணமடைந்ததை அடுத்து இறுதி நிகழ்வுகளில் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீமானின் கார் ஓட்டுனராக அவர் கூடவே எந்நேரமும் இருந்து வந்தவர் ஓட்டுனர் அன்புச்செழியன். அரசியல் கூட்டங்கள் முதல் சினிமா படப்பிடிப்பு வரை சீமான் எங்கு சென்றாலும் அது அன்புவோடுதான். அவ்வளவு நெருக்கமாக இருந்த அன்பு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த சீமான் உடனடியாக அன்புவின் சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அழுகையை அடக்க முடியாத அவர் அன்புவின் உடலைப் பார்த்ததும் ‘தம்பீ… ‘ எனக் கதறி அழ ஆரம்பித்தார். இதைப்பார்த்த அன்புவின் குடும்பத்தாரும் சீமானைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தனர்.  அதன் பின்னர் அவரது உடலை சுமந்து சென்ற சீமான் இறுதி மரியாதைகள் முடியும் வரை கூடவே இருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்