ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் போட்டியா?

வியாழன், 19 ஜனவரி 2023 (16:19 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. 
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுபோல் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி உறுதியாக போட்டியிடும் என்றும் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
 மேலும் நானும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்வேன் என்று அவர் கூறியதால் சீமான் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்