பரமக்குடி அருகே பள்ளி ஆசிரியர் படுகொலை

ஞாயிறு, 26 ஜூன் 2016 (10:41 IST)
பரமக்குடி அருகே பள்ளி ஆசிரியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே சத்திரக்குடி அரசுப் பள்ளி உள்ளது. இங்கு  ராஜ்குமார் என்பவர் ஆசிரிராக பணியாற்றி வருகிறார்.
 
இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்