மது அருந்திவிட்டு வகுப்பறையில் ஆபாச படம் பார்த்த மாணவர்கள் : திண்டுக்கல்லில் அதிர்ச்சி

சனி, 6 பிப்ரவரி 2016 (15:15 IST)
மது அருந்திவிட்டு, வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த பள்ளி மாணவர்கள் பற்றிய செய்தி திண்டுக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 
 
திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே செயல்படும் ஒரு அரசுக் கல்லூரியில், ஒரு வகுப்பறையின் கதவு மூடப்பட்டிருந்தது. சந்தேகப்பட்ட ஒரு ஆசிரியர், உள்ளே சென்று பார்த்துள்ளார்.
 
அப்போது, +1 படிக்கும் நான்கைந்து மாணவர்கள் ஒன்று சேர்ந்து மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் அவர்களிடம் சென்று விசாரித்த போது, அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தது ஆபாச படம் என்று தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனைவரும் மது அருந்தி இருப்பதும் தெரிய வந்தது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் தலைமையாசிரியர் ராமானுஜத்திடம் இதுபற்றி கூறியுள்ளார். மேலும் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் கூறப்பட்டது.
 
அந்த மாணவர்கள் தற்போது பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். 
 
+1 படிக்கும் மாணவர்கள், மது அருந்துவிட்டு வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்