திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே செயல்படும் ஒரு அரசுக் கல்லூரியில், ஒரு வகுப்பறையின் கதவு மூடப்பட்டிருந்தது. சந்தேகப்பட்ட ஒரு ஆசிரியர், உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது, +1 படிக்கும் நான்கைந்து மாணவர்கள் ஒன்று சேர்ந்து மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் அவர்களிடம் சென்று விசாரித்த போது, அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தது ஆபாச படம் என்று தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனைவரும் மது அருந்தி இருப்பதும் தெரிய வந்தது.