சேட்லைட் போனுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க வாலிபர்

திங்கள், 2 மார்ச் 2015 (10:03 IST)
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க வாலிபரிடம் ஒருவர் சேட்லைட் போனுடன் வந்தார், அந்த சேட்லைட் போனை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை விமான நிலையத்தில், மும்பை செல்லும் விமானம் நேற்று தயார் நிலையில் இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்தவர்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
 
அப்போது, அமெரிக்க வாலிபர் டேவிட் என்பவரின் உடமைகளை சோதனையிட்டபோது, அவர் சேட்லைட் போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அவரிடம் அதுபற்றி விசாரித்தபோது, கடந்த 26 ஆம் தேதி சென்னைக்கு வந்ததாகவும், அமெரிக்காவில் அந்த சேட்லைட் போனை பயன்படுத்தி வருவதாகவும் கூறினார். 
 
இதைத் தொடர்ந்து, அவரது சேட்லைட் போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அவருக்கு குற்றப்பின்னணி உள்ளதா, அவர் யார் யாருடன் பேசினார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்