இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால் கனிசமான எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்திற்கு வரவில்லை என்ற தகவலும் வருகிறது.