சின்னம்மா மரணம்: ஜெயலலிதாவிற்காக போகாத சசிகலா!

சனி, 19 நவம்பர் 2016 (16:21 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியும், தோழியுமான சசிகலாவின் சின்னம்மா குணர்பூசணி அம்மாள் நேற்று மரணமடைந்தார். இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.


 
 
கடந்த மாதம் சசிகலாவின் நாத்தனார் அதாவது கணவர் நடராஜனின் சகோதரி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குக்கு சசிகலா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் கவனித்து வருவதால் அவர் கடைசி நேரத்தில் செல்லவில்லை.
 
இந்நிலையில் சசிகலாவின் அப்பாவின் தம்பி வைத்திலிங்கம் சாளுவரின் மனைவியான குணர்பூசணி அம்மாள் மரணமடைந்துள்ளார். இவரது இறுதிச்சடங்கு மன்னை நகரில் நடக்கிறது.
 
இந்த இறுதி ஊர்வலத்திலும் சசிகலா கலந்து கொள்ளமாட்டார் என கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா வேறு அறைக்கு இன்று மாற்றப்படுவதாக தகவல்கள் வருவதால் சசிகலா மன்னார்குடி சென்று தனது சின்னம்மாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளமாட்டர் என கூறப்படுகிறது. சசிகலாவின் தம்பி திவாகரன் தலைமையில் அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்