இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருகின்றன எனவும், அவரின் உடலுக்கு தேவையான சுவாசத்தை வென்டிலேட்டர் மூலம் தேவைப்படும்போது மட்டும் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.