முதலமைச்சர் சிகிக்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்த சசிகலாவின் உறவினர்!

செவ்வாய், 4 அக்டோபர் 2016 (18:40 IST)
தமிழக முதல்வர் ஜெயலலித கடந்த மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களுக்கு மேலாகியும் அவர் இன்னமும் மருத்துவமனையில் தான் இருக்கிறார்.


 
 
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருகின்றன எனவும், அவரின் உடலுக்கு தேவையான சுவாசத்தை வென்டிலேட்டர் மூலம் தேவைப்படும்போது மட்டும் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனைக்கு சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரன் குடும்பத்துடன் சென்றுள்ளார். அவர்கள் முதல்வரை பார்த்தார்களா என்று செய்தி வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்