மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவாவை தாக்கியதும், அதிமுகவில் இருந்து நீக்கியதும், ஜெயலலிதா மீதான பகிரங்க குற்றச்சாட்டுகளும் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை அடித்ததற்கு மன்னிப்பு கேட்டதுடன், அவர் ஒரு நேர்மையான மனிதர் என கூறினார். மேலும் திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறினார். சசிகலா புஷ்பாவுக்கு நேற்று முதல் ஆளாக திமுக எம்.பி.கனிமொழி ஆதரவு தெரிவித்தார்.