இது குறித்து கூறிய அவர், முதல்வரின் உடல்நிலை குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்ல வேண்டியது அரசின் கடமை. அங்கு என்ன தான் நடக்கிறது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு உண்டு.
மேலும், இரண்டு நாட்களில் தெரியவில்லை என்றால் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பேன். திமுக தலைவர் கலைஞர் சொன்னது போல் புகைபடம் வெளியிட வேண்டும், அல்லது வாட்ஸ் ஆப்பில் குரல் செய்தியாவது வெளியிட வேண்டும் எனவும் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.