தமிழகத்தின் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு ஊருகளிலிருந்து பக்தர்கள் வருவதால் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால். பக்தர்களும் கோயிலுக்கு நடந்து கூட செல்ல முடியாமல் பெரும் சிரமத்துகுள்ளாயினர் ,தகவலறிந்து போலீஸார் விரைந்துவந்து அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையல், அதிகாலையில் வீரராகவர் கோயிலுக்கு சசிகலா திடீரென்று வந்தார். அவருக்கு கோயில் சார்பில், பூரண மரியாதை வழங்கப்பட்டது. அம்மனை தரிசித்துவிட்டு மூலவரை தரிசித்த சசிகலா, பின்னர், கோயில் குளக்கரைக்கு சென்று குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தினார்.